தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


அரசனை உதைத்த கோமாளி!

(OSHO's story)
ஒரு அரசன் தன்னை மகிழ்விப்பதற்காக ஒரு கோமாளியை நியமித்திருந்தான். ஒரு நாள் அரசன் கண்ணாடி முன் நின்று தன் உருவத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கோமாளி காலை எட்டி அரசன் முதுகில் உதைத்தான். இதை சற்றும் எதிர்பாராத அரசன் தடுமாறி, கண்ணாடியில் மோதிக்கொண்டான்.

கோபம் கொண்ட அரசன் கோமாளியைப் பார்த்துச் சொன்னான்;

'முட்டாள் தனமான உன்னுடைய இந்தச் செயலுக்கான தகுந்த சமாதானத்தைச் சொல்லாவிட்டால் உனக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.'

பயந்தவாறு கோமாளி சொன்னான்;

'அரசே தாங்கள் இங்கு இருப்பீர்கள் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. அரசியார்தான் இங்கு நின்று கொண்டிருப்பதாக நினைத்தேன்'

அவன் மன்னிக்கப்பட்டான். ஏனெனில் அவன் செய்ததை விட முட்டாள் தனமான காரணத்தைச் சொல்லிவிட்டான். ஆனால் இதற்கான காரணத்தை உணர்ந்து கொண்ட அரசன் அறிவுள்ளவனாகத்தானே இருக்க வேண்டும்...

Labels:

0 Comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment

வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

Subscribe to Post Comments [Atom]

HOME  |  NEWS  |  COMPUTER  |  HEALTH  |  CUISINE  |  PHILOSOPHY  |  STORY  |  AGRI


!! மனிதன் - எதை நோக்கி !!

↑ Grab this Headline Animator