குடியாட்சி அரசாங்கம்!! - சாக்ரடீஸ்
இம்முறையில் பல குறைபாடுகள் உள்ளன. இதில் தலைவர்கள் அல்லது வல்லுநர்கள் சிறப்பான அறிவுத் திறமையைப் பெற்றிருக்கிறார்கள் என்று காட்டக்கூடிய சான்று எதுவும் இல்லை.குடியாட்சி அரசாங்கத்தில் மக்களுடைய வாழ்க்கைக் குறிக்கோள்களை வரையறுக்கும் பொறுப்பு அரசாங்கத்தை நடத்துவதற்குப் போதிய செயலறிவு அற்ற மக்களிடத்தில் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் ஓர் ஆட்சிக் கொள்கை ஒழுக்க செயலுக்கு அல்லது நீதிக்குப் பொருந்தி இருக்கிறதா என்று தீர்மானிப்பதற்கு உரிய மன வளர்ச்சி அல்லது மதிப்பு மக்கள் எல்லோரிடத்திலுமே சமமாகக் காணப்படுகிறதென்று பிழையாகக் குடியாட்சி அரசாங்கம் கருதுகிறது.
அரசு அறிவு வாய்ந்த குழுவினருடைய ஆட்சியில் இருத்தல் வேண்டும். மனிதர் சமமானவர் என்ற அடிப்படையில், திருவுளச் சீட்டு முறையில் அலுவலர்களை அமர்த்துகிற அதீனியக் குடியாட்சி கண்டிக்கப்படத் தக்கதாகும்.
Labels: philosophy, socrates

ஞானமடைந்தவன் ஒவ்வொருவனும் உடலை விட்டுப் போகவே விரும்புவான். ஆனால் பலவந்தமாய் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பமாட்டான். நாம் அனைவரும் கடவுளின் பாதுகாப்பிலிருக்கிறோம். நாம் நம்மை நாம் வதைத்துக்கொள்ள நமக்கு உரிமையில்லை. கடவுள் நமக்கு விடுதலையளிக்கும் வரையிலும் நாம் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.

