தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


ஸ்டாப் செலக்சன் கமிஷன் நடத்தும் பட்டதாரி நிலை தேர்வு


மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும், பிற அரசுத் துறைகளிலும் மூன்றாம் நிலைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக எஸ்.எஸ். சி., எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுவது நாம் அறிந்ததுதான்.

இந்தக் குழுமத்தின் மூலம் 2 பிரிவுகளில் உதவியாளர், பல்வேறு பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றில் குரூப் ஏ பிரிவில் உதவியாளர், இன்ஸ்பெக்டர் ஆப் போஸ்ட்ஸ், இன்ஸ்பெக்டர் ஆப் சென்ட்ரல் எக்சைஸ், பிரிவென்டிவ் ஆபிசர், எக்ஸாமினர், துணை ஆய்வாளர்கள், இன்ஸ்பெக்டர் ஆப் இன்கம்டாக்ஸ், அசிஸ்டன்ட் என்போர்ஸ்மென்ட் ஆபிசர், டிவிஷனல் அக்கவுன்டன்ட், ஸ்டாடிஸ்டிகல் இன்வெஸ்டிகேட்டர்-கிரேடு 2 ஆகிய பதவிகளும், குரூப் பி பிரிவில் ஆடிட்டர், ஜூனியர் அக்கவுன்டன்ட், யூ.டி.சி., டாக்ஸ் அசிஸ்டன்ட், கம்பைலர் ஆகிய பதவிகளும் அடங்கும்.

வயது: எஸ்.எஸ்.சி.,யின் பட்டதாரி நிலைத் தேர்வு நடத்தப்படும் பதவிகள் அனைத்திற்கும் 15.04.2011 தேதி அடிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரேடு 2 ஸ்டாடிஸ்டிகல் இன்வெஸ்டிகேடர் பதவிக்கு விண்ணப்பிக்க உச்ச பட்ச வயது 26 ஆகவும், சி.பி.ஐ.,யில் துணை ஆய்வாளர் மற்றும் அஸிஸ்டன்ட் பதவிக்கு குறைந்த பட்ச வயது 20 ஆகவும் அதிகபட்ச வயது 27 ஆகவும், இதர பதவிகளுக்கு குறைந்த பட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 27 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: ஸ்டாப் செலக்ஷன் அறிவித்துள்ள கம்பைலர் பதவிக்கு விண்ணப்பிக்க எகனாமிக்ஸ், கணிதம் அல்லது புள்ளியியலைக் கட்டாயப் பாடமாகக் கொண்டு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பிரிவு 2 ஸ்டாடிஸ்டிகல் இன்வெஸ்டிகேடர் பதவிக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பில் புள்ளியியலை முக்கிய பாடமாகவோ அல்லது முக்கியப் பாடமாகப் படித்திருக்க வேண்டும். எகனாமிக்ஸ் பாடத்தைப் படித்தவர்களும், காமர்ஸ் பிரிவில் புள்ளியியலைப் படித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். முழு விபரங்கள் அறிய கட்டாயம் இணைய தளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: எஸ்.எஸ்.சி.,யின் மேலே கண்ட பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல், திறனறியும் தேர்வு, கம்ப்யூட்டர் திறனறியும் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள்: ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் இந்தப் பதவிகளுக்காக நடத்தவுள்ள தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மையங்களிலும், புதுச்சேரியிலும், திருவனந்தபுரத்திலும் நடைபெறும். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கு என்று குறிப்பிட்ட கோடு எண் உள்ளது என்பதால் விண்ணப்பிக்கும் போது கவனம் தேவை. இந்தத் தேர்வு மையங்களில் தேர்வு எழுத விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பங்களை 15.04.2011க்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்பது குறித்த முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.

முகவரி:

Regional Director ( SR),
Staff Selection Commission,
EVK Sampath Building, 2nd Floor,
College Road,
CHENNAI 600006.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.04.2011

Labels: ,

பென்டிரைவில் உள்ள தகவல்கள் எவ்வாறு திருடப்படுகின்றன


மொபைல் போனில் நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு முதல் பென்டிரைவ் வரை அனைத்திலும் இருந்து தகவல்கள்களை எப்படி திருடுகின்றனர். இதை எவ்வாறு தடுப்பது.

மெமரி கார்டு, பென்டிரைவ் மற்றும் Portable Harddisk பற்றிய சில அடிப்படை தகவல்களை முதலில் தெரிந்து கொள்வோம். Secondary Storage Device என்று சொல்லக்கூடிய இந்த வகை Memory Card, Pen Drive களில் நாம் சேமிக்கும் தகவலானது 0 மற்றும் 1 ஆகவே சேமிக்கப்பட்டிருக்கும்.

இதில் சேமிக்கப்படும் எந்த தகவலும் அழிவதே இல்லை. எப்போது வேண்டுமானாலும் அதில் சேமிக்கப்பட்ட தகவல்களை நாம் Recover செய்து பெற முடியும். முந்தைய இரண்டு முறை சேமித்த தகவல்களை மட்டும் தான் பெற முடியும் என்பதில்லை.

ஆரம்ப காலத்தில் நாம் பயன்படுத்திய தகவல்களை கூட பெற முடியும். நம் மெமரி கார்டு அல்லது பென்டிரைவ் களை ரிப்பேர் செய்ய கொடுக்கும் போது அவர்கள் மெமரி கார்டை கணணியில் இணைத்ததும் மெமரி கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் அவர்களிடம் இருக்கும்.

மென்பொருள் துணை கொண்டு அந்த கணணியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்படும் இதற்கான எந்த அறிவிப்பும் அந்த கணணியின் திரையில் தெரியாது. கணணி பற்றிய அடிப்படை தெரிந்தவர்கள் எதற்காக இவ்வளவு நேரம் ஆகிறது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.

வைரஸை நீக்க சில நிமிடங்கள் ஆகும் என்று சொல்வர். என்ன தான் நாம் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை நீக்கி இருந்தாலும் இதை எளிதாக Recover செய்து கொடுக்க பல மென்பொருள் உள்ளது. நாம் திரையை பார்த்து கொண்டு தான் இருப்போம்.

ஆனாலும் நம் மெமரி கார்டின் ஆரம்பகாலத்தில் உள்ள தகவல்கள் முதல் நேற்று வரை உள்ள அனைத்து தகவல்களும் அவர்கள் வசம் சென்று விடும். உங்கள் மெமரி கார்ட் வைரஸால் பாதிக்கப்பட்டால் சிறந்த வைரஸ் நீக்கும் மென்பொருள் கொண்டு நாமே வைரஸை நீக்கலாம்.

வைரஸ் பாதித்த பின் மெமரி கார்டில் இருக்கும் தகவல்களை சேமிக்க வேண்டுமானால் Start பொத்தானை RightClick செய்து Explore என்பதை சொடுக்கி வரும் திரையில் இடது பக்கத்தில் Memory Card க்கான டிரைவை தேர்ந்தெடுத்து நம் முக்கிய கோப்புகளை காப்பி செய்து நம் கணணியில் சேமிக்கலாம். எல்லாம் காப்பி செய்து முடித்த பின் Memory Card ஐ Format செய்து பயன்படுத்தலாம்.

Labels:

தே‌ள், பா‌ம்பு‌க் கடி‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்

பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும்.

பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.

பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பேதியாகி பாம்பு விஷம் இறங்கும்.

பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும்.

பிர‌ம த‌ண்டு பூக்களை 20 எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும்.

Labels: ,