"ஒரு நாட்டு மக்களிடையே ஒற்றுமை நிலவவேண்டுமாயின் அந்நாடு மிகப் பெரியதாகவோ மிகச் சிறியதாகவோ இருத்தல் கூடாது. அந்நாடு ஓர் அளவுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்நாட்டில் அமைதியும் மனநிறைவும் அரசோச்சுவதைக் காணலாம்."
"நல்ல பண்புகளைப் பெறுவதிலும் பிறர்க்குப் புகட்டுவதிலும் ஆர்வம் காட்டுவோர் தொகை பெருக வேண்டும். நுகர்வான்ந பிறரைத் துன்புறுத்தும் அளவிற்குத் துன்பப்படுவான். ஆதலால் தீய பண்புகளை வளரவிடாமல் நல்ல பண்புகளை வளர விடுதலே நல்லது."
"துன்பம் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் வந்து போகும் ஒன்றுதான். எனவே, துன்பம் உண்டாகும்போது நாம் மன அமைதியைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. நாம் அப்பொழுதுதான் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். பொறுமையில்லாமலும் அமைதி இல்லாமலும், உணர்ச்சி வயப்பட்டு நடப்பதால் பெறக்கூடிய பயன் ஒன்றுமே இல்லை. இந்த மனநிலையே இன்பம் வந்தபோதும் இருக்க வேண்டும்."
"பிறர் நமக்கு இழைத்த இன்னல்களுக்காக அவர்களைக் கடுமையாகத் தண்டியாமல் விடுதலும், மனிதர் இயல்பாகச் செய்யும் தவறுகளைப் பொறுப்பதும், நமக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை மறந்து நன்மைகளை மட்டும் எண்ணுவதும் பெருந்தன்மையாகும்."

No comments:
Post a Comment
வருகைக்கு நன்றி!!.. தங்களின் மேலதிக விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.