தற்போது www.flippar.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது..!!!


ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு ‌தினமு‌ம் ஒரு ஆ‌ப்‌பி‌ள்

ஆப்பிளில் நீர்ச்சத்து, புரதச்சத்து, குளோரோபில், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், பாஸ்பரஸ் மற்றும் பல ஆர்கானிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானப் பாதையில் ஏற்படும் என்சைம்கள் குறைபாட்டை சீர் செய்வதுடன் பலவிதமான வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்கின்றன.

மது அருந்துபவர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹாலின் அளவை குறைக்க ஆப்பிள் பெருமளவு உதவுகிறது. விஸ்கி எனப்படும் மதுவிலுள்ள பல சத்துக்கள் ஆப்பிளில் காணப்படுவதால் தொடர்ந்து ஆப்பிளை சாப்பிட்டு வர மது அருந்தும் எண்ணம் கட்டுப்படும்.

தோல் நீக்காத ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து ரத்தத்தில் கலந்துள்ள அதிக அமிலத்தன்மையை நடுநிலைப்படுத்துகிறது.

வ‌யி‌ற்று‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் பொழுது இனிப்பு சேர்க்காத ஆப்பிள் பழச்சாற்றை சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் கார்பானிக் அமிலமாக மாற்றப்பட்டு நெஞ்சுக்கரிப்பு கட்டுப்படுகிறது. செரிமான சக்தி அதிகரிக்கிறது.

Labels:

இன்று பூமி தினம்!

உலகின் பல பகுதிகளிலும் இன்று பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

பூமியின் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே பூமி தினமாகும். அமெரிக்க செனட் உறுப்பினர் கெலார்ட் நெல்சன் 1970ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி இந்த பூமி தினத்தை உருவாக்கினார். அன்று முதல் இது தொடர்ந்து அமெரிக்காவில் தவறாமல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தற்போது உலகெங்கும் இது பிரபலமாகியுள்ளது.

உலகெங்கும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் தனியாக கொண்டாடப்பட்டு வருவது ஒருபக்கம் இருந்தாலும் தற்போது ஏப்ரல் 22ம் தேதி பூமி தினமாகவும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பல நாடுகளில் பூமி வாரமாகவும் இது அனுசரிக்கப்படுகிறது. பிலடெல்பியாவில் ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை பூமி வாரமாக அனுசரிக்கிறார்கள். 1970ம் ஆண்டு முதல் இவ்வாறு கொண்டாட்பட்டு வருகிறது.ட

பூமி தினத்தையொட்டி பல்வேறு நாடுகலில் விதம் விதமான கோணத்தில் பூமி போன்ற மாதிரிகளை முக்கிய நகரங்களின் முக்கியப் பகுதிகளில் மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். அதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

புவிவெப்ப தடுப்பு விழிப்புணர்வு பிரசாரங்களும் இந்த ஆண்டு பூமி தினக் கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

Labels:

குடியாட்சி அரசாங்கம்!! - சாக்ரடீஸ்

இம்முறையில் பல குறைபாடுகள் உள்ளன. இதில் தலைவர்கள் அல்லது வல்லுநர்கள் சிறப்பான அறிவுத் திறமையைப் பெற்றிருக்கிறார்கள் என்று காட்டக்கூடிய சான்று எதுவும் இல்லை.

குடியாட்சி அரசாங்கத்தில் மக்களுடைய வாழ்க்கைக் குறிக்கோள்களை வரையறுக்கும் பொறுப்பு அரசாங்கத்தை நடத்துவதற்குப் போதிய செயலறிவு அற்ற மக்களிடத்தில் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் ஓர் ஆட்சிக் கொள்கை ஒழுக்க செயலுக்கு அல்லது நீதிக்குப் பொருந்தி இருக்கிறதா என்று தீர்மானிப்பதற்கு உரிய மன வளர்ச்சி அல்லது மதிப்பு மக்கள் எல்லோரிடத்திலுமே சமமாகக் காணப்படுகிறதென்று பிழையாகக் குடியாட்சி அரசாங்கம் கருதுகிறது.

அரசு அறிவு வாய்ந்த குழுவினருடைய ஆட்சியில் இருத்தல் வேண்டும். மனிதர் சமமானவர் என்ற அடிப்படையில், திருவுளச் சீட்டு முறையில் அலுவலர்களை அமர்த்துகிற அதீனியக் குடியாட்சி கண்டிக்கப்படத் தக்கதாகும்.

Labels: ,